பைலா பைலா ஹிந்தி பாடல்
அமெரிக்காவில் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் திரு. வெங்கிட கிருஷ்னன் சார் குரலில் பாலுஜியின் பைலா பைலா என்ற ஹிந்தி பாடல். மிகவும் அழகாக மெட்டு மாறாமல் பாடி தன் குரலில் அசத்தியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
|
அமெரிக்காவில் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் திரு. வெங்கிட கிருஷ்னன் சார் குரலில் பாலுஜியின் பைலா பைலா என்ற ஹிந்தி பாடல். மிகவும் அழகாக மெட்டு மாறாமல் பாடி தன் குரலில் அசத்தியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
|
Posted by
Anonymous
at
9:28 PM
0
comments
Labels: வி.கிருஷ்னன்
.jpg)
திரு.வி.கிருஷ்னன் சார் குரலில் ஓர் கலக்கலான பாடல் ரஜினிகாந்த் நடித்த பாஷா படத்தில் இருந்து “ஆட்டோக்காரன்” பாடல். பாலுஜியின் குரலை சிறிதும் தொடாமல் பாடல் காட்சியில் வரும் ஆதே உற்சாகத்தில் தன் சொந்தகுரலில் பாடி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கிருஷ்னன் சார் அவரின் அற்புதமான ஆர்வத்தை மனதார பாராட்டுவோம். வாழ்த்துக்கள் சார்.
|
Posted by
Anonymous
at
11:48 PM
0
comments
Labels: வி.கிருஷ்னன்
அடிமைப்பெண், தில்லுமுல்லு என்ற இரண்டு படங்களில் இருந்து சூப்பரான பாடல்களைப் பாடி கிருஷ்னன் சார் கலக்கியிருக்கிறார். பாலுஜி அவர்களின் பாடல்களை அழகாக தேர்வு செய்து பாடுவது அவரின் ரசிப்பு திறமையை காட்டுகிறது. அசத்தலாக பாடியிருக்கும் கிருஷ்னன் சாரரின் பாடல்களள போகப்போக தனி ஆல்பமாகவே போட்டுடலாம் போலிருக்கிறது. அவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்
|
|
Posted by
Anonymous
at
4:41 AM
2
comments
Labels: வி.கிருஷ்னன்

திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் மற்றும் இரண்டு பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.தாஸண்ணாவின் குரலில் இந்த இரண்டு பாடல்கள் ஒன்று மனைவி அமைவதெல்லாம் மன்மதலீலை மற்றும் பச்சைக்கிளிகள் தோளோடு இந்தியன் என்ற படங்களில் வருவது. பாலுஜியின் தீவிர ரசிகரான கிருஷ்னன் சாரின் மற்றுமொரு அவதாரம் இது. கேட்டு மகிழுங்கள். வாழ்த்துங்கள்.
|
|
Posted by
Anonymous
at
12:27 AM
1 comments
Labels: வி.கிருஷ்னன்

நவீன பாணி பாடல் பதிவு டூயட்டில் உணர்ச்சியில்லை எஸ்.பி.பி.பேச்சு
சென்னை, டிச 20: பாடகி இல்லாமல் நவீன பாணீயில் பாடல் பதிவு செவதால் டூயட்டில் உணர்ச்சியில்லை என்றார் எஸ்.பி.பாலசுபிரமணீயம் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் மற்றும் மோசர்பேர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் 'வெள்ளித்திரை'. இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கேசட்டை வெளியிட, மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களை பாராட்டி பாடகர் எஸ்.பி.பாலசுபிரமணியம் பேசியதாவது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்து உலக சாதனை படைத்தவர்கள். அவர்களது இசையின் தாக்கம் இல்லாமல் இப்போது ஒரு பாட்டுகூட வெளிவருவதில்லை. இவர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஒரே ட்ராக்கில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். இப்போது 200 ட்ராக் இருந்தாலும் அவரது தரத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. நவீன இசையமைப்பில், உடன் பாடுபவர்களின் குரலும் கேட்பதில்லை. டூயட் பாட்டு என்றால் கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. உடன் பாடுவது யார் என்று கேட்டால், 'இன்னும் முடிவு செய்யவில்லை, உங்க ட்ராக்கை மட்டும் பாடுங்கள்' என்று சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நடிகர் ப்ருத்விராஜ், இயக்குனர்கள் மணிரத்னம், விஜி, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் ஷங்கர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினகரன். 20.12.2007
Posted by
Anonymous
at
11:49 PM
3
comments

பாலுஜி அவர்களின் ரசிகர் குழுவின் மாடரேட்டர்களில் ஒருவர் திரு. தாசரதி அவர்கள் பாலுஜியின் "படைத்தானே பிரம்ம தேவன்" மற்றும் "கண்ணால் பேசும் " ஆகிய இரு பாடல்கள் இசையில்லாமல் அமைதியாக பாடி அசத்தியுள்ளார். அவர் பாடிய இந்த இரு பாடல்களை கேட்டால் மிகவும் சிரமில்லாமல் பாடியது போல் எனக்கு தோன்றுகிறது அப்படிதானே தாசரதி சார்? இவர் பாடிய விதத்தை கேட்டால் கேடப்பவர்களூக்கு அடேடே இவ்வளவு ஈஸியா? நாமும் பாடலமே என்ற ஆசையை தூண்டி விடும் குரல். குறிப்பாக கண்ணால் பேசும் பாடலை இசையில்லாமல் பாடினாலும் தாளம் சரியாக உள்ளது நம்மையையும் அறியாமல் தாளம் போடவைக்கும் பாடல் சரணங்களில் நல்ல முயற்சி செய்திருக்கிறார். அழகான பாடல் தேர்வு அவருக்கு என் வாழ்த்துக்கள். பாலுஜியின் அபிமான ரசிகர்கள் அனைவரும் இவ்விரு பாடல்களை கேட்டு அவரை வாழ்த்துங்கள்.
படைத்தானே பிரம்ம தேவன்
|
|
Posted by
Anonymous
at
3:59 AM
2
comments
Labels: Dasaradhi

திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்களின் இந்த முறை பாடப்பட்டிருக்கும் பாடல்கள் நம் மனதை ஒரு விதமான வித்தியாசமான சூழ்நிலையை உண்டாக்கும் கந்தர்வ குரலோன் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் இரு பாடலகளை அமைதியாக மிகவும் அழகாக பாடி வழங்கியுள்ளார். "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" பாடல் அருமையாக உள்ளது.
|

|
|

|
Posted by
Anonymous
at
3:27 AM
2
comments
Labels: வி.கிருஷ்னன்